Tuesday 28 January 2014

தமிழ்

' சோறு மட்டும் போதுமா '
' செ.சீனி நைனா முகமது '

தமிழனென்று சொல்வதென்றால்
தமிழை ஒதுக்கித் தள்ளாதே ! - நீ
தமிழை ஒதுக்கித் தள்ளாதே !- இன்பத்
தமிழுனக்கு வேண்டாமென்றால்
தமிழனென்று சொல்லாதே ! - உன்னைத்
தமிழனென்று சொல்லாதே !!!!

மொழிகட்கெல்லாம் அன்னையான
முன்னைமொழி தமிழடா - அது
உன்னை ஊக்கும் அமுதடா - அதை
இழிவென நீ எண்ணி விட்டால்
இழிந்திடும் உன் தரமடா - மெல்ல
அழிந்திடும் உன் இனமடா !!!!

எலிகள் கூட கீச்சுக்கீச்சு
மொழியைமாற்ற வில்லையே - அவை
இரவல் வாங்க வில்லையே - பெரும்
புலியைப் போல துள்ளும் உனக்கு
மொழியின் மானம் இல்லையா ? நீ
முகமில்லாத பிள்ளையா ???

சோறு போடும் மொழிகளெல்லாம்
சொந்தமொழி ஆகுமா ?? - உனக்குச்
சோறு மட்டும் போதுமா ?? - நிலை
மாறும்போது தாயைக்கூட
மாற்றிக்கொள்ளத் தோன்றுமா ?? - தன்
மானம் உனக்கு வேண்டுமா ???

No comments:

Post a Comment